Online New Tamil Songs

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find Tamilsongcollections, Tamil song collections, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

New Tamil Songs

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find Tamilsongcollections, Tamil song collections, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

Tamil Song Collections

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find online tamil new songs, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

Online Tamil Songs

Find number of tamil songs in one and only exclusive portal- Online Tamil New song collections. Here you can find online tamil new songs, tamil new songs, tamil songs download, online tamil songs, online new tamil songs

Sunday, April 6, 2014

Thenaliraman Songs Free Download - Online Tamil New Songs


Maan Karate Songs Free Download - Online Tamil New Songs


Maan Karate Tamil Movie Review

தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லப்படங்கள் வாய்த்து அதன்மூலம் புகழின் உச்சிக்கு போய்விடுகிறார்கள்... ஆனால் அடுத்து வரும் படங்களில் அந்த புகழை தக்கவைத்துக் கொண்டு வெற்றி நடைப்போட்டவர்கள் ஒரு சிலரே...!  ஒருசிலப்படங்கள் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவைக்கும் ஆனால் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து வந்தவழி தெரியாமல் போய்விடுவார்கள்...

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு அனுப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.. அந்த படத்தின் புகழ் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் திடீரென புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விநியோகஸ்கர் வரை படுகுஷியில் இருக்கவைத்தது... ஆனால்... தற்போது வந்துள்ள மான் கராத்தே படம்.. அவர் மீது உள்ள எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததா என்பது கேள்விகுறிதான்....!

பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலையிழக்கும் ஐந்து நண்பர்கள் (மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்) அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் கையில் சித்தர் ஒருவர் ஒரு செய்தித்தாளைக் கொடுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வரவிருக்கும் செய்தித்தாள் அது. அதில் ஒரு செய்தி இவர்களைப் பற்றியது. ராயபுரத்தில் வாழும் பீட்டர் (சிவகார்த்திகேயன்) மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்கிறார். அதில் கிடைக்கும் பரிசுத் தொகையான 2 கோடியை, ஐந்து ஐ.டி. நண்பர்களுக்கும் அவர் கொடுப்பதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

இதில் உற்சாகமடையும் அவர்கள் பீட்டரைப் பிடித்து வந்து ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆனால் அவருக்கு பாக்ஸிங் என்றாலே என்னவென்று தெரியாது. இதனால் அவருக்குப் பயிற்சியாளரை ஏற்பாடு செய்கிறார்கள். தான் காதலிக்கும் யாழினிக்கு (ஹன்சிகா) குத்துச் சண்டை பிடிக்கும் என்பதற்காகப் பீட்டரும் ஒப்புக்கொண்டு தயாராகிறார்.

முதல் இரண்டு சுற்றுக்களில் ‘மான் கராத்தே’ என்ற உத்தியை (எதிராளி முகத்தில் குத்த வரும்போது விலகிக்கொள்வது) பயன்படுத்திச் சிவகார்த்திகேயன் வெல்கிறார். இறுதிப் போட்டிக்கு அவர் தகுதிபெறும்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது. பல ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் பதக்கத்தைத் தக்கவைத்திருக்கும் தொழில்முறை குத்துச்சண்டை வீரரின் பெயரும் பீட்டர் (வம்சி கிருஷ்ணா) என்பதே அந்த உண்மை.

நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய பீட்டர் இவர்தானோ எனக் குழம்பும் ஐடி நண்பர்கள் ராயபுரம் பீட்டரை என்ன செய்தார்கள்? தனக்குக் குத்துச் சண்டை தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் காதலிக்காக இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு ராயபுரம் பீட்டர் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதுதான் திரைக்கதை.

கதையாகப் பார்க்கும்போது சுவையாகத் தோன்றலாம். ஆனால் காட்சிகளாகப் பார்க்கும்போது தலை கிறுகிறுக்கிறது. நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்ப்பே இல்லாத சரடுதான் ‘மான் கராத்தே’ கதை.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த எதிர்நீச்சலின் எதிர்மறை பிம்பம் இது. அதில் இருந்த முயற்சி, தன்னம்பிக்கை இரண்டையும் இழிவுபடுத்தும் விதமாக ஒரே நாளில் ஒருவன் குத்துச்சாண்டை வீரனாகி, பல ஆண்டுகளாக உழைத்துச் சாம்பியன்ஷிப் வென்ற ஒருவனை வீழ்த்துவதுபோலக் காட்டி, குத்துச்சண்டையையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் இழிவுபடுத்துகிறார் இயக்குநர்.

கதையின் முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமின்றி நாயகியின் அப்பா, ஐந்து ஐ.டி. நண்பர்கள், பயிற்சியாளராக வரும் ஷாஜி எனப் பல பாத்திரங்களும் பலவீனமாகவே இருக்கின்றன.

நடிப்பு, நடனம் இரண்டிலும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், டைமிங் சென்ஸைத் தவறவிட்டிருக்கிறார். மசாலாவை நம்பினோர் கைவிடப்படார் என்ற முடிவுடன் ஒரு புது இயக்குநர் (திருக்குமரன்) களம் இறங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஹன்ஸிகா கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். காமெடியனாக வளர்ந்து வரும் சதீஷை வீணடித்திருக்கிறார்கள்.

படத்தில் நிமிர்ந்து உட்கார வைப்பவர் இசையமைப்பாளர் அனிருத் மட்டும்தான். ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகமாகவே தட்டி அதைச் சராசரி ஆக்கிவிட்டிருக்கிறார்.

ராயபுரம் பீட்டருக்காக வெற்றியை விட்டுக் கொடுங்கள் என்று ரியல் பாக்ஸர் பீட்டரிடம் அவரது மனைவிச் சொல்கிறார். ‘உன்னை யாராவது கேட்டால் நான் விட்டுத் தருவேனா, அதே மாதிரிதான் பாக்ஸிங்கும்’ என்று உணர்ச்சிக்கரமாகப் பேசும் அவர், ராயபுரம் பீட்டரிடம், ‘உன் காதலியை விட்டுக்கொடு.. வெற்றியை விட்டுக் கொடுக்கிறேன்’ என்று வசனம் பேசுவது அருவருப்பான முரண்.

பெருங்கூட்டத்திடம் தர்ம அடி வாங்கிய பின், முகத்திலும், மூக்கிலும் ரத்தம் வடிய "மடங்க மடங்க அடிக்கிறதுலகூட இப்படியெல்லாங்கூடவா யோசிப்பாய்ங்க..! என்ற வடிவேலுவின் நிலைதான் ரசிகர்களுக்கும்.

மான் கராத்தே - ரசிகர்களை ஏமாற்றிய மாய மான்